Thursday, August 26, 2010

ஜூலை 12

வினாக்கள் மற்றும் பதில்கள்

1.உலகத்தின் விலக்கப்பட்ட நகரம் எது ?
2.மருத்துவ வெந்நீர் ஊற்றுகள் நிறைந்த நாடு எது ?
3.ஐரோப்பிய பொருளாதார நாடுகள் எப்போது உருவானது ?
4.உலகத்தின் நீர் நிலப்பரப்பு எவ்வளவு ?
5.பெண்டகன் என்றால் என்ன ?
6.இந்தியாவில் விமானப் பராமரிப்பு என்ஜினியராக பணியாற்றிய
முதல் பெண்மணி யார் ?
7.மிக நீளமான ஒடுபாதை இந்தியாவில் எந்த விமான
நிலையத்தில் உள்ளது?
8.போலீஸ் என்ற சொல் ஆங்கில அகராதியில் எப்போது
இடம் பெற்றது?
9.உலகிலேயே மிக உயரத்திலிருந்து விழும் நீர்விழ்ச்சி எது ?
10.ஆக்ஸிசன் இல்லாத பொருள் எது ?

பதில்கள்:
1.லாசா -தீபெத், 2.செக்கோஸ்லாவாகியா,3.25-03-1957-ல்,
4.14,44,85,740 ச.கி.மீ,5.அமெரிக்காவின் ராணுவம் ,விமானம்
மற்றும் கப்பல் படையின் ஒருங்கினைந்த தலைமையகம்,
6.புவன்ஸ்ரீ கெளதம்,7.மும்பை விமான நிலையம்,
8.1714-ம் ஆண்டு,9.வெனிசுலா நீர்விழ்ச்சி,10.மண்ணெண்ணை.
இன்று ஜூலை 12

umarthambi.jpg

பெயர் : உமர் தம்பி
மறைந்த தேதி : ஜூலை 12, 2006
தமிழ் கணிமைக்கு சிறந்த பங்களிப்புக்களை
வழங்கிய ஆளுமைகளுள் ஒருவராவார்.இவர்
கணினியிலும் இணையத்திலும் தமிழை
பயன்படுத்துவதற்கு உதவக்கூடிய பல
செயலிகளையும் கருவிகளையும், எழுத்துருக்களையும்
ஆக்கியளித்துள்ளார். தமிழ் இணையம் இருக்கும் வரை
உங்கள் பெயர் நிலைத்து இருக்கும் நன்றி.

ஜூலை 16

வினாக்கள் மற்றும் பதில்கள்


1.பயணிகளை சுமந்து கொண்டு பறந்த முதல் விமானம் எது ?
2.ஒரே நாளில் விவாகரத்து வழங்கும் நாடு எது ?
3.புதுடில்லியை வடிவமைத்த கட்டிடக்கலைஞர் யார் ?
4.ஒரு கடல் மைல் என்பது எவ்வளவு தூரம் ?


5.இந்தியாவைச் சுற்றி அமைந்துள்ள நாடுகளில் மிகச்சிறிய
நாடு எது?
6.குச்சிப்பிடி நடனத்தின் தாயகம் எது ?
7.இந்தியாவின் மிகப் பழமையான செய்தித்தாளின் பெயர் என்ன?
8.போட்ஸ்வானா நாட்டின் கரன்ஸியின் பெயர் என்ன ?
9.உலகின் முதல் அருங்காட்சியகம் எது ?


10.இன்றும் மரத்தினால் செய்த செருப்பை உபயோகிக்கும்
நாடு எது?

பதில்கள்:
1.டக்ளஸ் DC-3, 2.டொமினிகன் குடியரசு,3.லட்டியன்ஸ்,


4.1-925 கி.மீ,5.பூடான்,6.ஆந்திரா,7.மும்பை சமாச்சார்,8.புலா,
9.ஆஸ்ரமாலியன்,10.செயிண்ட் நிக்கலஸ்.


இன்று ஜூலை 16






பெயர் : டி.கே.பட்டம்மாள்,
மறைந்ததேதி : ஜூலை 16, 2009
ஒரு புகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகி.


காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர். 1962-ம் ஆண்டில்
சங்கீத நாடக அகாடெமி விருது, 1971-ல்
பத்மபூசன்,1998ம் ஆண்டில் பத்மவிபூசன்,
தேசியகுயில்,சங்கீதகலாநிதி, கலைமாமணி என பல
விருதுகளை வென்றவர். புகழ் பெற்ற பாடகி நித்யஸ்ரீ


மகாதேவன் இவரது பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது.

ஜூலை 15

வினாக்கள் மற்றும் பதில்கள்
1.நன்கு வளர்ந்த யானை ஒரு நாளைக்கு எவ்வளவு தீனி


உட்கொள்ளும் ?
2.ஐஸ் கீரிமை கண்டுபிடித்தவர் யார் ? எப்போழுது ?
3.சூரியனின் மேல்பரப்பில் வெப்ப நிலை என்ன ?
4.வயதானவர்களுக்கு ஏற்படும் எழும்பு சிதைவின் பெயர் என்ன ?
5.எறும்புகளை பற்றி ஆராயும் கலைக்கு என்ன பெயர் ?


6.உலகிலேயே பெண்களுக்கான முதல் காவல்துறைப்படை
எப்போது தொடங்கப்பட்டது?
7.காந்திஜி இறந்தபோது அனுதாபம் தெரிவிக்காத ஒரே நாடு எது?
8.இளம் வயதில் நோபல் பரிசு பெற்றவர் யார் ?
9.மனித உடலில் பாஸ்பரத்தின் அளவு என்ன ?


10.இந்தியாவின் இன்சாட் 1D எங்கிருந்து ஏவப்பட்டது ?

பதில்கள்:
1.100 பவுண்டுகள், 2.ஜெரால்ட் டிஸ்ஸேன் கி.பி.1620,


3.6,000 டிகிரி C,4.ஆஸ்டியோபரோசிஸ்,5.மைர் மெக்காலஜிம்
6.1928- பிரிட்டன்,7.ரஷியா,8.மார்டின் லுதர் கிங்,9.2,000
தீக்குச்சிகள் தயாரிக்கும் அளவு,10.அமெரிக்கா -கேப் கேனவரால்.


இன்று ஜூலை 15 





பெயர் : காமராஜர் ,
பிறந்ததேதி : ஜூலை 15, 1903

காமராசர் தமிழ் நாட்டின் முன்னாள்


முதலமைச்சர்களுள் ஒருவர் ஆவார்.
1954 ஆம் ஆண்டு் அப்போதைய சென்னை
மாகாணத்தின் முதலமைச்சர் ஆனார்.
இவர் 9 ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராக பதவி
வகித்தார். தமிழகத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு
இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.


காமராஜ் எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்றவர்.
இவர், தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை.
உங்களால் தேசத்திற்கு பெருமை.

ஜூலை 18

வினாக்கள் மற்றும் பதில்கள்
1.நிகற்புகம் எனப்படுவது எத்தனை ?
2.அருணகிரிநாதர் எந்த ஊரில் அவதரித்தார் ?


3.கம்பளிக்காக வளர்க்கப்படும் அடுகளுக்கு பெயர் என்ன ?
4.உலக அமைதிக்கான நோபல் பரிசு யாரால் சிபாரிசு
செய்யப்படுகிறது ?
5.’கருடா’ என்ற பெயர் கொண்ட விமானசேவை எந்த நாட்டில்
இருந்து இயங்குகிறது ?
6.வெங்காயத்தில் அதிகமுள்ள வைட்டமின் எது ?


7.மனிதனைப்போல் தலையில் வழுக்கை விழும் குரங்கு எது ?
8.முதல் மோட்டார் ரோடுரோலர் எந்த நாட்டில் தயாரிக்கப்பட்டது?
9.’செலினியம் செல்’ என்ற போட்டோ முறையை
கண்டுபிடித்தவர் யார் ?
10.உயிரியல் கவிஞர் என்றழைக்கப்படுபவர் யார் ?





பதில்கள்:

1.100 கோடி, 2.திருவண்ணாமலை,3.மரினோ,
4.நார்வே அரசு,5.இந்தோனேஷியா,6.வைட்டமின் ‘பி’,
7.ஆண் குரங்கு,8.இங்கிலாந்து,9.1எர்னஸ்ட் வெர்னர்


10.சர் ஜெகதீஸ் சந்திர போஸ்.


இன்று ஜூலை 18






பெயர் : நெல்சன் மண்டேலா,
பிறந்ததேதி : ஜூலை 18, 1918

தென்னாப்பிரிக்காவின் மக்களாட்சி முறையில்


தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர்
ஆவார். அதற்கு முன்னர் நிறவெறிக்கு எதிராகப்
போராடிய முக்கிய தலைவர்களுள் ஒருவராக
இருந்தார்.இன்றைய உலகில் அதிகம் மதிக்கப்படும்
தலைவர்களில் ஒருவராக விளங்குகிறார்.

ஜூலை 20

வினாக்கள் மற்றும் பதில்கள்
1.தமிழ் நாடக உலகின் தந்தை எனப்போற்றப்படுபவர் யார்?


2.எம்.ஜி.ஆர் இயக்கிய முதல் படம் எது ?
3.ஜான்சிராணியின் பெயர் என்ன ?
4.செதில்களே இல்லாத மீன் எது ?
5.தக்காளிச்சாற்றில் எந்த அமிலம் அதிகம் உள்ளது ?
6.’கிபாட்’ என்பது எந்த நாட்டு நாணயம் ?
7.சூரியகிரகணம் எந்தத்திதியில் ஏற்படும் ?


8.இந்தியாவின் முதல் பெண் கிரிக்கெட் நடுவர் யார் ?
9.ஒளிசுழற்சி மாற்றியம் எது ?
10.வாத்துக்கள் எந்த நேரத்தில் முட்டையிடும் ?


பதில்கள்:



1.சங்கரதாஸ் சுவாமிகள், 2.நாடோடி மன்னன்,3.லட்சுமிபாய்,
4.நியூகினி,5.அஸிட்டிக் அமிலம்,6.பர்மா,7.அமாவாசை,
8.அஞ்சலி,9.மெண்டலிக் அமிலம்,10.அதிகாலையில் மட்டும்.


இன்று ஜூலை 20






பெயர் : மார்க்கோனி,
மறைந்ததேதி : ஜூலை 20, 1937

வானொலியைக் கண்டு பிடித்தவர்.


"வானொலியின் தந்தை" எனப்படுபவர்.1909-ல்
இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்.
கம்பியிலாத்தொலைத் தொடர்பில் ஆர்வம்
ஏற்பட்டு ஆழ்ந்து ஆய்வுகள் செய்து வந்தார். இருபத்தி ஒன்றாம்
வயதில் 1895 முதன் முதலில் ஓரிரு மைல் தூரத்தில்


'திசைதிரும்பும் மின்கம்பம் ' [Directional Antenna] மூலம்
தொடர்பு ஏற்படுத்துவதில் வெற்றி பெற்றார்.

ஜூலை 23

வினாக்கள் மற்றும் பதில்கள்
1.எந்த நம்பரைக் குறிக்கும் எழுத்து ரோமானிய மொழியில்


இல்லை ?
2.இந்தியாவுக்குள் ஊடுருவிய முதல் ஐரோப்பியர் யார் ?
3.இந்திய சுதந்திரப்போராட்டத்தில் பங்கேற்ற அன்னிபெசண்ட
அம்மையார் எந்த நாட்டைச் சேர்ந்தவர் ?
4.கோடைகாலத்தில் கானல் நீர் தோன்ற காரணம் என்ன ?
5.பைரோ மீட்டர் என்ற கருவி எதற்க்குப் பயன்படுகிறது ?


6.படகு ஒட்டம் எந்த மாநிலத்தின் பண்டிகை விளையாட்டு ?
7.இந்தியாவில் ஆங்கிலக் கல்வியை அறிமுகப்படுத்தியவர் யார்?
8.மனித உடலில் எவ்வளவு நரம்புகள் உள்ளன ?
9.உலகிலேயே ஒரே ஒரு இந்துமத நாடு எது ?
10.தமிழ்நாட்டில் குழந்தைகள் கவிஞர் என அழைக்கப்பட்டவர்


யார் ?

பதில்கள்:
1.பூஜ்யம், 2.அலெக்ஸாண்டர்,3.அயர்லாந்து,
4.ஒளி பிரதிபலிப்பு,5.உயர் வெப்ப நிலையை அளக்க,


6.கேரளா,7.பெண்டிங் பிரபு,8.72 ஆயிரம் நரம்புகள்,
9.நேபாளம்,10.அழ.வள்ளியப்பா
இன்று ஜூலை 23





பெயர் : பெ. வரதராஜுலு நாயுடு,
மறைந்ததேதி : ஜூலை 23, 1957

இந்திய அரசியல்வாதியும், இந்திய விடுதலைப்


போராட்ட வீரரும் ஆவார். மருத்துவரும்,
பத்திரிக்கையாளருமான இவர் சென்னை
மாநிலச் சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும்
தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர்.

ஜூலை 24

வினாக்கள் மற்றும் பதில்கள்
1.அறிவியல் மையங்களின் 2 -வது உலக மாநாடு எங்கு


நடைபெற்றது?
2.1998 -ம் ஆண்டுக்கான ஞானபீட விருதைப் பெற்றவர் யார் ?
3.கணிப்பொறி அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு எது ?
4.ஜி-15 -ன் 9 வது உச்சி மாநாடு எங்கு நடைபெற்றது ?
5.5- வது தேசிய விளையாட்டுப்போட்டி எங்கு நடந்தது ?


6.இந்தியாவில் எப்போது தபால் தலை அறிமுகப்படுத்தப்பட்டது ?
7.ஆசிய விளையாட்டுப்போட்டி முதலில் எங்கு ஆரம்பிக்கப்பட்டது?
8.’துறவை விட இல்லறமே நல்லறம்’ என்று போதிக்கும்
மதம் எது?
9.இந்தியாவின் முதல் வானெலிநிலையம் எங்கு தொடங்கப்பட்டது?


10.விண்வெளியில் மனிதனுக்கு முன் பறந்த உயிரினம் எது ?



பதில்கள்:

1.கல்கத்தாவில், 2.கிரிஷ் கர்னாட்,3.1952 -ம் ஆண்டு,


4.ஜமைக்காவில்,5.மணிப்பூரில், 6.ஜூலை 1,1854,
7.1951 -டெல்லியில்,8.சீக்கிய மதம், 9.சென்னை,10.நாய்

இன்று ஜூலை 24






பெயர் : கார்ல் மலோன்,
பிறந்ததேதி : ஜூலை 24, 1963

முன்னாள் அமெரிக்க கூடைப்பந்து ஆட்டக்காரர்


என். பி. ஏ. வரலாற்றில் மிக உயர்ந்த வலிய
முன்நிலைகளின் ஒன்றாவார் என்று பல
கூடைப்பந்து நிபுணர்கள் கூறுகின்றனர்.என்.பி.ஏ.
வரலாற்றில் இரண்டாவது மிகவும் அதிக புள்ளிபெற்றவர் ஆவார்

ஜூலை 25

வினாக்கள் மற்றும் பதில்கள்
1.தாஜ்மஹால் கட்டப்பட்ட காலம் எது ?
2.தமிழ்நாட்டில் எந்த வகை மரம் அதிக அளவில் காகிதம்


செய்யப் பயன்படுகிறது ?
3.நாரிலிருந்து காகிதம் தயாரிப்பது எந்த நாட்டில்
கண்டுபிடிக்கப்பட்டது ?
4.பாபா அணு ஆராய்ச்சி நிலையம் எங்குள்ளது ?
5.’காந்தி’ திரைப்படத்தை தயாரித்தவர் யார் ?
6.1951-1952-ல் ஆசிய விளையாட்டுப்போட்டி எங்கு


நடைபெற்றது?
7.’கிரிக்கெட் மை ஸ்டைல் ‘ என்ற நூலின் ஆசிரியர் யார்?
8.வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடம் எது ?
9.’அர்ஜூனா ‘ பதக்கம் எந்தத் துறையில் இருப்பவருக்கு
வழங்கப்பப்படுகிறது ?
10.இந்தியாவில் தேக்கு மரம் எங்கு அதிகமாக கிடைக்கிறது ?





பதில்கள்:

1.கி.பி. 16 ஆம் நூற்றாண்டு, 2.யூகலிப்டஸ்,3.எகிப்து,
4.மும்பை,5.ரிச்சர்டு அட்டன்பரோ, 6.டெல்லி,


7.கபில்தேவ்,8.கயத்தாறு, 9.விளையாட்டுத்துறை,10.கேரளா


இன்று ஜூலை 25






பெயர் : ஜிம் கார்பெட்,
பிறந்ததேதி : ஜூலை 25, 1875

புகழ்பெற்ற புலி வேட்டைக்காரர், இமயமலைத்


தொடரில் உள்ள குமாவுன் மலையில்
அமைந்துள்ள கோடைவாழிடமான நைனி தாலில்
பிறந்தவர்.ஆங்கில வம்சாவளியினர்.
இயற்கையைப் பேணுவதில்ஆர்வம் மிகக்கொண்டிருந்தவர்.
புலிகள் மற்றும் சிறுத்தைப்புலிகள் பற்றிய இவரது
நூல்களுக்காகப் புகழ்பெற்றவர்.

ஜூலை 26

வினாக்கள் மற்றும் பதில்கள்
1.இந்த ஆண்டின் பெண்மனி என்ற சங்கம் எப்போது


தொடங்கப்பட்டது ?
2.நம் நாட்டிற்கு இந்தியா என்ற பெயரை சூட்டியவர்கள் யார் ?
3.ஆசியாவின் தென்கோடியில் அமைந்துள்ள தீபகற்பம் எது ?
4.உலகிலேயே மிகப்பெரிய நூலகம் எந்த நாட்டில் உள்ளது ?
5.தொலைக்காட்சி நிலையங்கள் அதிகம் உள்ள நாடு எது ?


6.வருமான வரி செலுத்தாத நாடு எது ?
7.ஜெருசலம் எந்த நாட்டின் தலைநகரமாகும் ?
8.பிளாஸ்டிக் பேப்பரை தயாரித்த முதல் நாடு எது ?
9.ரவீந்திரநாத் தாகூரின் முதல் கவிதை புத்தகத்தின்
பெயர் என்ன ?
10.ரேடியத்தை கண்டிபிடித்த மேரிகியூரியின் சொந்தநாடு எது?



பதில்கள்:
1.1945 ஆம் ஆண்டு, 2.கிரேக்கர்கள்,3.இந்தியா,
4.அமெரிக்கா,5.ஸ்வீடன், 6.குவைத்,
7.இஸ்ரேல்,8.ரஷ்யா, 9.மாலைப் பாடல்கள்,10.போலந்து
இன்று ஜூலை 26





பெயர் : மு. கு. ஜகந்நாதராஜா,
பிறந்ததேதி : ஜூலை 26, 1933

ஒரு பன்மொழிப் புலவர். தமிழ், தெலுங்கு,


மலையாளம்,கன்னடம்,சமஸ்கிருதம்,பாலி,
ஹிந்தி, ஆங்கிலம், துளு எனப் பல இந்திய
மொழிகளை அறிந்தவர். மன்னர் கிருஷ்ண
தேவராயர் தெலுங்கில் இயற்றிய ஆமுக்த மால்யத
( சூடிக் கொடுத்தவள்) என்ற காவியத்தை 1988 ஆம் ஆண்டு
தமிழாக்கம் செய்தார்.1989 ஆம் ஆண்டு இந்த


மொழிபெயர்ப்பு நூலுக்கு சாகித்ய அகாதமி விருது
பெற்றார். முதன் முதலில் தமிழில் மொழிபெயர்ப்பு
விருது பெற்ற நூல்.

ஜூலை 27

வினாக்கள் மற்றும் பதில்கள்
1.தமிழ்நாட்டில் பழுப்பு நிலக்கரி அதிகமாக கிடைக்கும் இடம் எது?


2.தமிழ்நாட்டில் பறவைகள் சரணாலயம் எங்குள்ளது ?
3.இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் உள்ள இடம் எது ?
4.மகாபாரதத்திற்கு முதலில் வைக்கப்பட்ட பெயர் என்ன ?
5.எட்டு முறை மத்திய பட்ஜெட்-ஐ தாக்கல் செய்தவர் யார் ?
6.இந்தியாவில் முதன் முதலாக கார் சாலை எங்கு போடப்பட்டது?


7.இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் அந்தஸ்தை எப்போது பெற்றது?
8.’புலிட்சர்’ விருது எந்தத் துறைக்கு வழங்கப்படுகிறது?
9.முதல் சர்வதேச திரைப்பட விழா எந்த ஆண்டு நடைபெற்றது?
10.கால்பந்து விளையாட்டு எந்த ஆண்டு ஆசிய விளையாட்டில்


சேர்க்கப்பட்டது ?

பதில்கள்:
1.நெய்வேலி, 2.வேடந்தாங்கல்,3.புதுடெல்லி,4.ஜெயா,
5.மொரார்ஜி தேசாய், 6.கல்கத்தா 1825 ஆம் ஆண்டு,


7.1959 ஆம் ஆண்டு,8.பத்திரிகைத் துறை,9.1952 ஆம் ஆண்டு,
10.1951 ஆம் ஆண்டு
இன்று ஜூலை 27 





பெயர் : தேசிக விநாயகம் பிள்ளை,
பிறந்ததேதி : ஜூலை 27, 187
6


20 நூற்றாண்டில் வாழ்ந்த புகழ் பெற்ற கவிஞர்.
பக்திப் பாடல்கள், இலக்கியம் பற்றிய பாடல்கள்,
வரலாற்று நோக்குடைய கவிதைகள், குழந்தைப்
பாடல்கள், இயற்கைப் பாட்டுக்கள், வாழ்வியல்
போராட்டகவிதைகள், சமூகப் பாட்டுக்கள், தேசியப் பாட்டுக்கள்,


வாழ்த்துப் பாக்கள், கையறு நிலைக் கவிதைகள்,
பல்சுவைப் பாக்கள் என பலவற்றை இயற்றியவர்.

ஜூலை 28

வினாக்கள் மற்றும் பதில்கள்
1.ஹிட்லரை சந்தித்த தமிழ்நாட்டவர் யார் ?


2.விளையாட்டு வீராங்கணை மல்லேஸ்வரி எந்த மாநிலத்தைச்
சேர்ந்தவர்?
3.உலகத்துன்பத்திற்கு காரணம் அச்சம் என்று கூறியவர் யார்?
4.ஆசிய கண்டத்திலே மிகப்பெரிய நகரம் எது ?
5.பூமியில் முதன் முதலாக தோன்றிய உயிர் எது ?

6.நாயை விட பல மடங்கு மோப்ப சக்தி உடைய உயிரினம் எது?

7.பேருந்தை கண்டுபிடித்தவர் யார் ?
8.அமெரிக்கஅதிபரின் வெள்ளைமாளிகை எப்போது கட்டப்பட்டது?
9.குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொள்ள குறைந்தபட்ச
வயது என்ன ?
10.பில்லியர்ட்ஸ் விளையாட்டில் சாம்பியன் பட்டம் வென்ற


முதல் இந்தியர் யார் ?

பதில்கள்:
1.ஜி.டி.நாயுடு, 2.ஆந்திரா,3.சுவாமி விவேகானந்தர்,


4.டோக்கியோ,5.ஒற்றை செல் உயிரி புரோட்டோசோவா,
6.விலாங்கு மீன், 7.ஹென்றி போர்டு,8.11-10-1800,
9.12 வயது,10.கீத் சேத்தி
இன்று ஜூலை 28





பெயர் : பிரான்ஸ் பேர்டினண்ட்,
பிறந்ததேதி : ஜூலை 28, 1914

ஆஸ்திரியாவின் முடிக்குரிய இளவரசரும்,


ஹங்கேரி, மற்றும் பொஹேமியாவின்
இளவரசரும் ஆவார். அத்துடன் 1896 முதல்
இறக்கும் வரையில் ஆஸ்திரிய-ஹங்கேரியின்
பட்டத்துக்கு உரியவரும் ஆவார்.

ஜூலை 30


வினாக்கள் மற்றும் பதில்கள்


1.இந்தியாவின் மிக நீளமான நதி எது ?
2.பழுப்பு நிலக்கரியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும்
மாநிலம் எது ?
3.நிலநடுக்கத்தை அறிய உதவும் கருவி என்ன ?
4.எந்த நாடு அதிக தங்க உற்பத்தி செய்கிறது ?


5.மிக முக்கியமான பணப்பயிர் எது ?
6.இந்தியாவில் தங்கம் அதிகம் கிடைக்கும் மாநிலம் எது ?
7.நிலக்கரி உற்பத்தியில் முன்னனி வகிக்கும் மாநிலம் எது ?
8.சணல் அதிகம் ஏற்றுமதி விளைவிக்கும் மாநிலம் எது ?
9.எல்லோரா கலைக்கோவில்கள் இருக்கும் இடம் எது ?


10.உயரத்தை அளவிட பயன்படும் கருவி எது ?

பதில்கள்:
1.கங்கை, 2.தமிழ்நாடு,3.சீஸ்மோகிராப்,4.தென் ஆப்பிரிக்கா,


5.பருத்தி, 6.கர்நாடகம் இராமச்சந்திரன், 7.பீகார்,
8.மேற்கு வங்காளம்,9.மகாராட்டிரம்,10.ஆல்டிமீட்டர்
இன்று ஜூலை 30 





பெயர் : சனத் ஜெயசூரியா,
பிறந்தததேதி : ஜூலை 30, 1969

இலங்கை துடுப்பாட்ட அணியின் முன்னணித்


துடுப்பாளர். இவர் மாத்தறை சென் சவதியஸ்
கல்லூரியில் கல்விகற்றார். புளூம்பீல்ட்
அணிசார்பாக முதற்தரப் போட்டிகளில்
ஆடத்தொடங்கிய சனத் 1989-90 காலப்பகுதியில்
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மெல்பேணில் நடைபெற்ற
ஒருநாட் போட்டியில் அறிமுகமானார்.இன்று பல


சாதனைகளுக்கு சொந்தகாரர்
.

ஜூலை 31

வினாக்கள் மற்றும் பதில்கள்
1.வங்காளவிரிகுடாவில் கலக்காத நதி எது ?


2.குளிர்காலத்தில் அதிக மழைபெரும் மாநிலம் எது ?
3.தமிழ்நாட்டின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும்
மாவட்டம் எது ?
4.ஐந்து நதிகள் பாயும் மாநிலம் எது ?
5.ஜோக் நீர்வீழ்ச்சி எங்குள்ளது ?
6.உலகின் முதல் விண்வெளி வீரர் யார் ?


7.மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் இடம் எது ?
8.சில்கா ஏரி காணப்படும் இடம் எது ?
9.மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் உள்ள இடம் எது ?
10.எலிபெண்டா குகைகள் எங்குள்ளன ?

பதில்கள்:


1.நர்மதை, 2.தமிழ்நாடு,3.கோயம்புத்தூர்,4.பஞ்சாப்,
5.கர்நாடகம், 6.யூரி ககாரின், 7.உதகமண்டலம்,
8.மகாநதிச் சமவெளி,9.சென்னை,10.மும்பை
இன்று ஜூலை 31





பெயர் : செய்குத்தம்பி பாவலர்,
பிறந்தததேதி : ஜூலை 31, 1874

தமிழ்ப் பெரும் புலவர். சீறாப்புராணத்திற்குச்


சிறந்தோர் உரையெழுதியவர். கோட்டாற்றுப்
பிள்ளைத்தமிழ், அழகப்பாக் கோவை முதலிய
சிற்றிலக்கிய நூல்களையும், சில நாடக
நூல்களையும் எழுதியவர். கூர்த்தமதி படைத்து
விளங்கியதால் ஒரே சமயத்தில் நூறு வகையான
செயல்கள் செய்யும் ‘'சதானவதானம்' என்னும்


கலையில் சிறந்து விளங்கியவர்.

ஆகஸ்ட் 2

வினாக்கள் மற்றும் பதில்கள்
1.கலிங்கத்துப்பரணியை இயற்றியவர் யார் ?


2.’ மண நூல்’ என்பது எந்த நூலின் வேறுபெயர் ?
3.சென்னைப்ப் பல்கலைக்கழகம் எப்போது உருவாக்கப்பட்டது ?
4.இந்தியாவின் பிஸ்மார்க் என்று அழைக்கப்பட்டவர் யார் ?
5.பால் உற்பத்தியைப் பெருக்க அரசு கொண்டு வந்த திட்டத்தின்


பெயர் என்ன ?
6.’சுதந்திரா கட்சி’யை உருவாக்கியவர் யார் ?
7.’திருத்தொண்டர் புராணம்’ என்பது எந்த நூலின்
வேறொரு பெயர்?
8.கல்பாக்கம் அனுமின் நிலையம் எந்த மாவட்டத்தில் உள்ளது?
9.சென்னை மாநகராட்சி எப்போது உருவாக்கப்பட்டது ?


10.பவானிசாகர் அணை எந்த மாவட்டத்தில் உள்ளது ?


பதில்கள்:

1.செயங்கொண்டார், 2.சீவகசிந்தாமணி,3.1857 ஆம் ஆண்டு,


4.சர்தார் வல்லபாய் படேல், 5.வெண்மைப் புரட்சி, 6.ராஜாஜி,
7.பெரியபுராணம், 8.காஞ்சிபுரம்,9.1688 ஆம் ஆண்டு,10.ஈரோடு

இன்று ஆகஸ்ட் 2






பெயர் : அலெக்சாண்டர் கிரகாம் பெல் ,
மறைந்த தேதி : ஆகஸ்ட் 2, 1922

இவர் ஆசிரியராகவும், அறிவியல் அறிஞராகவும்


அறியப்படுகிறார். இவரது தாயாரும்
மனைவியும் செவிடராதலினால் இவரது
ஆய்விற்கு இது ஓர் உந்துசக்தியாக
அமைந்திருக்கலாம். இவரது ஆய்வுகள் ஊடாக 1876 ஆம்
ஆண்டு தொலைபேசி உருவாக்கப்பட்டது. இவர் பெல்
தொலைபேசி நிறுவனத்தின் நிறுவனரும் ஆவார்.

ஆகஸ்ட் 3

வினாக்கள் மற்றும் பதில்கள்
1.தமிழ்நாட்டின் முதல் பெண் அமைச்சர் யார் ?


2.சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் எப்போது இயற்றப்பட்டது ?
3.தென்னிந்தியாவின் மிகப்பெரிய கோவில் எது ?
4.உலகிலேயே மிகப் பெரிய சிறைச்சாலை எங்குள்ளது ?
5.இந்தியாவின் 26 -வது மாநிலம் எது ?
6.உலகில் அதிக பரப்பளவைக் கொண்ட கடல் எது ?


7.வந்தே மாதரம் பாடலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார்?
8.நீலகிரி மாவட்டத்தின் தலைநகர் எது ?
9.சிறுவாணி அனை எங்குள்ளது ?
10.பூம்புகார் எந்த மாவட்டத்தில் உள்ளது ?

பதில்கள்:


1.ஜோதி வெங்கடாசலம், 2.1967-ல்,3.ஸ்ரீரங்கம் ரங்கநாதர்
கோவில்,4.ரஷ்யா, 5.சட்டிஸ்கர், 6.பசிபிக் மகாசமுத்திரம்,
7.ஓம் பூரி,8.உதகமண்டலம்,9.கோயம்புத்தூர்,10.நாகப்பட்டிணம்

இன்று ஆகஸ்ட் 3





பெயர் : அலெக்சாண்டர் சோல்செனிட்சின்
மறைந்த தேதி : ஆகஸ்ட் 2, 1922

ஒரு ரஷ்ய எழுத்தாளர் ஆவார். இவரின்


எழுத்துகளில் கூலாக் என்ற சோவியத் தொழில்
முகாம்களை பற்றி எழுதி உலகுக்கு இதை பற்றி
தெரியவந்தது. இதனால் 1970- ல்
இலக்கியத்துக்காக நோபல் பரிசு வென்றுள்ளார்

ஆகஸ்ட் 4

வினாக்கள் மற்றும் பதில்கள்
1.இந்தியாவில் முதன் முதலாக தீயணைப்பு படை எங்கு


அமைக்கப்பட்டது ?
2.கீரிஸ் நாட்டின் பழைய பெயர் என்ன ?
3.அதிக வயதில் இந்திய ஜனாதிபதி ஆனவர் யார் ?
4.1979-ல் உலகக் கோப்பை கிரிக்கெட்போட்டி எங்கு நடந்தது ?
5.டெல்லியின் முதல் பெண் மேயர் யார் ?
6.சஹாரா பாலைவனம் எந்த கண்டத்தில் உள்ளது ?


7.கிரேட் விக்டோரியா பாலைவனம் எந்த கண்டத்தில் உள்ளது ?
8.டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் கேட்ச் பிடித்தவர் யார் ?
9.உலகிலே அதிக மக்களால் பேசப்படும் மொழி எது ?
10.கண்தானத்திற்கான வங்கி எப்போது தொடங்கப்பட்டது ?



பதில்கள்:
1.மும்பையில், 2.ஹெல்லாஸ்,3.ஆர்.வெங்கட்ராமன்
(76 வயதில்) 4.இங்கிலாந்து, 5.அருணா ஆஸஃப் அலி,
6.ஆப்பிரிக்கா, 7.ஆஸ்திரேலியா,8.ஆலன் ஹில்,9.சீன மொழி,


10.1944-ம் ஆண்டு
இன்று ஆகஸ்ட் 4





பெயர் : பராக் ஒபாமா
பிறந்த தேதி : ஆகஸ்ட் 4, 1961

அமெரிக்காவின் 2008 குடியரசுத் தலைவர்


தேர்தலில் வெற்றிபெற்ற மக்களாட்சிக் கட்சி
வேட்பாளராவார். தற்போது இவர் மேலவையிலும்
இலினொய் மாநிலத்தின் சார்பில் இளைய
உறுப்பினராக உள்ளார். அமெரிக்க வரலாற்றில்
ஆப்பிரிக்க அமெரிக்க இனத்தை சேர்ந்த முதலாவது
குடியரசுத் தலைவர் என்ற பெருமையும், மற்றும்


செனட் அவையின் ஐந்தாவது ஆப்பிரிக்க-அமெரிக்க
இனத்தவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.

ஆகஸ்ட் 25

வினாக்கள் மற்றும் பதில்கள்
1.இரத்தத்தின் முக்கிய பணி யாது ?
2.நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது?


3.எந்த இரு நாள்கள் மட்டும் இரவும் பகலும் சமமாக இருக்கும்?
4.உலகப்புகழ் பெற்ற மோனலிஸா ஓவியம் தற்போது எங்குள்ளது?
5.நுரையீரல் புற்றுநோய் ஏற்பட முக்கிய காரணம் எது ?
6.தீபாவளி அன்று பிறந்த மத குரு யார் ?
7.வாசனைத் தபால் தலை வெளியீட்ட நாடு எது ?


8.உலகிலேயே மிக உயர்ந்த பீடபூமி எது ?
9.மகாத்மா காந்தி எந்த ஆண்டு பாரிஸ்டர் பட்டம் பெற்றார் ?
10.இரண்டு முறை நோபல் பரிசு பெற்ற பெண் விஞ்ஞானி யார்?

பதில்கள்:


1.ஆக்சிஜனை எடுத்துச்செல்வது,2.1986,3.மார்ச் 21,
4.பாரிஸ் -லூவர் மியூசியம்,5.புகைபிடிப்பது,6.குருநாணக்,
7.தென்னாப்பிரிக்கா,8.திபெத்,9.1914,10.மேரிக்கியூரி அம்மையார்
இன்று ஆகஸ்ட் 25





பெயர் : கிருபானந்த வாரியார் ,
பிறந்த தேதி : ஆகஸ்ட் 25, 1906

சிறந்த முருக பக்தர். தினமும் ஆன்மீக


சொற்பொழிவுகள் நிகழ்த்துவதையே தவமாகக்
கொண்டு வாழ்ந்தவர். சமயம், இலக்கியம்,
மட்டுமன்றி பேச்சுத்திறன், எழுத்துத்திறன், இசை
போன்று பல துறைகளிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர்.
"அருள்மொழி அரசு", என்றும் "திருப்புகழ் ஜோதி"


என்றும் அனைவராலும் பாராட்டப்பட்டவர்.

Wednesday, August 25, 2010

வினாக்கள் மற்றும் பதில்கள்

வினாக்கள் மற்றும் பதில்கள்
1.இந்தியாவின் ’மாக்கிய வெல்லி’என்று அழைக்கப்பட்டவர் யார்?


2.எகிப்திய நாகரிகம் எங்கு தோன்றியது ?
3.அசோகரின் கல்வெட்டுக்கள் பெரும்பாலும் எந்த எழுத்துக்களில்
எழுதப்பட்டிருக்கின்றன ?
4.ஒரு மின்னலின் சராசரி நீளம் என்ன ?
5.பாம்புகளே இல்லாத கடல் எது ?
6.பென்சில் தயாரிக்கப்பயன்படும் மூலப்பொருட்கள் எவை ?


7.காளான்களில் எத்தனை வகைகள் உள்ளது ?
8.கங்கையும் யமுனையும் கூடும் இடம் எது ?
9.ஒருவர் மிகக்குறைந்த ஒலியை எங்கு கேட்க முடிகிறது ?
10.மக்கள் தொகையில் ஆண்களை விட பெண்கள் அதிகமாக
உள்ள மாநிலம் எது ?

பதில்கள்:


1.சாணக்கியர்,2.நைல் நதிக்கரையில்,3.பிராமி,4.6 கி.மீ,
5.அட்லாண்டிக் கடல்,6. காரியம் , களிமண், மரக்கூழ்,
7.70 ஆயிரம் வகைகள்,8.அலகாபாத்,9.பாலைவனத்தில்,
10.கேரளா.
இன்று ஆகஸ்ட் 24





பெயர் : வே. இராமலிங்கம் ,
மறைந்த தேதி : ஆகஸ்ட் 24, 1972

தமிழறிஞரும், கவிஞரும் ஆவார். “கத்தியின்றி


இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது” போன்ற
தேசபக்திய பாடல்களைப் பாடிய இவர்
தேசியத்தையும், காந்தியத்தையுயும் போற்றியவர்.
முதலில் பாலகங்காதர திலகர் போன்றவர்களின் தீவிரவாதத்தால்
ஈர்க்கப்பட்ட இவர் மகாத்மா காந்தியின் கொள்கைகளால்


ஆட்கொள்ளப்பட்டபின் அகிம்சை ஒன்றினால் மட்டுமே
விடுதலையைப் பெறமுடியும் என்ற முடிவுக்கு வந்தவர்.



வினாக்கள் மற்றும் பதில்கள்
1.பச்சையம் இல்லாத தாவரம் எது ?
2.சோதனைக்குழாய் மூலம் எருமைக்கன்றை உருவாக்கிய


நாடு எது ?
3.மனித உரிமை தினம் எந்த நாளில் கொண்டாடப்படுகிறது ?
4.நீந்தத் தெரியாத மிருகம் எது ?
5.எகிப்தின் வெள்ளைத் தங்கம் எது ?
6.எல்லோரா குகைகள் அமைந்துள்ள நாடு எது ?
7.இந்தியாவின் பெரிய நகரம் எது ?


8.மிக உயரமான எரிமலை எது ?
9.கங்காரு தாவும் தூரம் எவ்வளவு ?
10.இடிதாங்கியை கண்டுபிடித்தவர் யார் ?

பதில்கள்:
1.காளான்,2. இந்தியா,3.டிசம்பர் 10,4.ஒட்டகம்,


5.பருத்தி,6.அவுரங்காபாத்,7.கொல்கத்தா,
8.கேடபாக்சி,9.15 அடி,10.பெஞ்சமின் ஃபிராங்க்ளின்

இன்று ஆகஸ்ட் 21





பெயர் : சுப்பிரமணியன் சந்திரசேகர்,
மறைந்த தேதி : ஆகஸ்ட் 21, 1995

இவர் ஒரு வானியல் இயற்பியலாளர் ஆவார்.


இந்தியாவில் லாகூரில் பிறந்தவர்.விண்மீன்கள்
பற்றிய இவரது ஆய்விற்காக இவருக்கும்
வில்லியம் ஃபௌலருக்கும் 1983 இல்
இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.



வினாக்கள் மற்றும் பதில்கள்
1.பிறந்த குழந்தையின் சராசரி எடை அளவு என்ன ?


2.மனித உடலிலுள்ள எலும்புகளின் எண்ணிக்கை என்ன ?
3.மலேரியா எந்த கொசு கடிப்பதால் வருகிறது ?
4.தாவரங்களில் திடீர் மாற்றத்தை தூண்டவல்லது எது ?
5.காற்றுச்சீர்கேடால் உண்டாகும் நோய் எது ?
6.அறிவெளி இயக்கம் எதனுடன் தொடர்புடையது ?


7.இந்தியக்காடுகளின் ராஜா என்று அழைக்கப்படுவது எது ?
8.பட்டாம்பூச்சிகளின் சரணாலயம் எங்குள்ளது ?
9.எதன் குறைவாக சோகை நோய் ஏற்படுகிறது ?
10.குள்ளமான மனிதர்களை உருவாக்கும் சுரப்பி எது ?

பதில்கள்:


1.2.5 கி.கி,2.206,3.பெண் அனோபிலஸ்,4.எக்ஸ் கதிர்கள்,
5.தீராத மார்புச் சளி,6.கல்லாமையை ஒழித்தல்,7.தேக்குமரம்,
8.மெக்ஸிகோ,9.இரும்புச் சத்து,10.பிட்யூட்டரி

இன்று ஆகஸ்ட் 20





பெயர் : நாராயண மூர்த்தி,
பிறந்ததேதி : ஆகஸ்ட் 20, 1946

இன்போசிஸ் என்றழைக்கப்படும் தகவல்


தொழில்நுட்ப நிறுவனத்தை நிறுவியவர்.கடந்த
2002ம் ஆண்டு வரை இந்நிறுவனத்தின் தலைமை
செயற்குழு அதிகாரியாக பணியாற்றி, தற்போது
இவர் இக்குழுமத்தின் கௌரவ செயல்குழுவின் தலைவராகவும்,
தலைமை ஆலோசகராகவும் அங்கம் வகிக்கிறார்.


பணியிலிருந்து ஒய்வு பெற்றபின் தமது நேரத்தை
சமுகசேவையிலும், இந்திய கிராம வளர்ச்சியிலும் செலவிடுகிறார்.



வினாக்கள் மற்றும் பதில்கள்
1.சேர மன்னர்களின் கொடியில் உள்ள சின்னம் எது ?
2.சோழ மன்னர்களின் கொடியில் உள்ள சின்னம் எது ?
3.பாண்டிய மன்னர்களின் கொடியில் உள்ள சின்னம் எது ?
4.’இந்திய தரிசனம்’ என்ற நூலின் ஆசிரியர் யார் ?
5.தமிழின் முதல் சினிமாஸ்கோப் திரைப்படம் எது ?
6.இந்தியாவின் விடுதலைக்குப் பாடுபட்ட வெளிநாட்டு
பெண்மனி யார் ?
7.லட்சத்தீவுகள் எத்தனை தீவுகளைக்கொண்டது ?
8.’கண்ணீர் நகரம்’ எனக் குறிப்பிடப்படும் நகரம் எது ?
9.உலகிலேயே மிகப்பெரிய அஞ்சல் துறை உள்ள நாடு எது ?
10.இந்தியாவில் பிறந்த முதல் சோதனை குழாய்
குழந்தையின் பெயர் என்ன
?
பதில்கள்:
1.வில்,2.மீன், 3.புலி,4.ஜவஹர்லால் நேரு, 5.ராஜராஜ சோழன்,
6.அன்னிபெசன்ட்,7.27 தீவுகள், 8.ஜெருசலேம்,
9.இந்தியா,10.துர்கா
இன்று ஆகஸ்ட் 19



பெயர் : சங்கர் தயாள் சர்மா,
பிறந்ததேதி : ஆகஸ்ட் 19, 1918

இந்தியாவின் ஒன்பதாவது குடியரசுத் தலைவர்
ஆவார். இவர் 1992இல் இருந்து 1997 வரை
பதவியில் இருந்தார். இதற்கு முன் இவர்
எட்டாவது துணைக் குடியரசுத் தலைவராக
பதவி வகித்தார். 1952-இல் இருந்து 1956 வரை போபால்
மாகாணத்தின் முதலமைச்சராகவும் இருந்தார்
.



வினாக்கள் மற்றும் பதில்கள்
1.பூனாவில் ‘ஹோம் ரூல்’ கழகத்தை ஏற்படுத்தியவர் யார் ?


2.திருப்புகழைப் பாடியவர் யார் ?
3.துப்பறியும் மோப்ப நாய்களை முதன் முதலிம் பயன்படுத்திய
நாடு எது ?
4.இந்தியாவில் மிகப்பெரிய கோட்டை எங்குள்ளது ?
5.பசுமைப்புரட்சியின் தந்தை என்று அழைக்கப்பட்டவர் யார் ?
6.’மறுமலர்ச்சியின் தாயகம்’ என்று அழைக்கப்படும் நாடு எது ?


7.வரலாற்று ஆசிரியர்களின் சொர்க்கம் என்று அழைக்க்படும்
நாடு எது ?
8.புக்கர் பரிசு பெற்ற முதல் இந்தியப்பெண் எழுத்தாளர் யார் ?
9.உலகின் மிகப்பெரிய புத்தர் சிலை எங்குள்ளது ?
10.இந்திய நேரம் எந்த இடத்தின் நேரத்தை வைத்துக்


கணக்கிடப்படுகிறது ?

பதில்கள்:
1.பாலகங்காதர திலகர்,2.அருணகிரிநாதர், 3.பிரான்ஸ்,
4.ஹைதராபாத், 5.சி.சுப்பிரமணியம்,6.இத்தாலி,


7.சீனா, 8.அருந்ததி ராய், 9.சீனாவில்,10.அலகாபாத்
இன்று ஆகஸ்ட் 16





பெயர் : இந்திய சுதந்திர தினம்,
பிறந்த தேதி : ஆகஸ்ட் 16, 1947

19ஆம் நூற்றாண்டின் இந்தியாவின் தலைசிறந்த


ஆன்மீகவாதிகளுள் ஒருவர்.இவர்
விவேகானந்தரின் குருவாவார்.அனைத்து
மதங்களும் ஒரே இறைவனை அடையும்
வெவ்வேறு வழிகளே என்பதை தன் அனுபவங்கள் மூலம்
உணர்ந்து அதையே வலியுறுத்தியவர்.உங்களால் நம்
தேசத்திற்கே பெருமை.


வினாக்கள் மற்றும் பதில்கள்
1.தமிழ்நாட்டில் அதிக அளவு உள்ள மண்ணின் வகை எது ?


2.இந்தியாவில் அனுசக்தி கமிஷன் எப்போது நிறுவப்பட்டது ?
3.கடவுளின் சொந்த நாடு என்று வர்ணிக்கப்படும் மாநிலம் எது ?
4.உலகின் மிகப்பெரிய வளைகுடா எது ?
5.முதன் முதலில் செயற்கைக்கோளை அனுப்பிய நாடு எது ?
6.சென்னையின் மின்சார இரயில் எந்த ஆண்டு வந்தது ?


7.சூரியன் மறையாத நாடு என்று போற்றப்படும் நாடு எது ?
8.இந்தியாவின் மிகப்பெரிய தீவு எது ?
9.ரோம் நகரம் எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது ?
10.வேகமாய் வளரும் மரம் எது ?

பதில்கள்:


1.கரிசல் மண்,2.ஆகஸ்ட் 10 , 1948, 3.கேரளா,
4.மெக்ஸிகோ வளைகுடா, 5.ரஷ்யா,6.1931 ஆம் ஆண்டு,
7.இங்கிலாந்து, 8.கிரேட் நிக்கோபார், 9.கி.மு.753
10.யூக்லிப்டஸ்
இன்று ஆகஸ்ட் 15 





பெயர் : இந்திய சுதந்திர தினம்,
பிறந்த தேதி : ஆகஸ்ட் 15, 1947

பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலை அடைந்து


இந்தியா தனி சுதந்திர நாடான நாள். இந்நாளில்
நம் தேசத்தின் விடுதலைக்காகப் பாடுபட்ட
அத்தனை மக்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.
என்றும் உங்களை நம் தேசம் மறவாது.



வினாக்கள் மற்றும் பதில்கள்
1.அகில இந்திய வானொலி எந்த ஆண்டு தொடங்கப்பட்டது ?


2.வீடுகளுக்கு நம்பர் கொடுக்கும் பழக்கம் எப்போது உருவானது?
3.நமது நாக்கில் எத்தனை சுவை நரம்புகள் உள்ளன ?
4.பசுவுக்கு எத்தனை இரைப்பைகள் ?
5.விண்கலத்தில் பயணம் செய்யும் ஒருவருக்கு வானம் என்ன
நிறமாகத் தெரியும் ?


6.நாய்க்கு எத்தனை பற்கள் உள்ளது ?
7.பிஸ்மார்க் என்பவர் எந்த நாட்டின் இரும்பு மனிதர் ?
8.மஞ்சள் காமாலையை குணப்படுத்தும் செடி எது ?
9.வானவெடிகளின் தாயகம் என்று அழைக்கப்படும் நாடு எது ?
10.இரு தேசியக்கொடிகள் கொண்ட நாடு எது ?



பதில்கள்:
1.1936 ஆம் ஆண்டு,2.1463-ம் ஆண்டு, 3.3000,
4.நான்கு, 5.கருப்பு, 6.42,7.ஜெர்மனி, 8.கீழாநெல்லி,
9.சீனா,10.ஆப்கானிஸ்தான்



இன்று ஆகஸ்ட் 18





பெயர் : சுபாஷ் சந்திர போஸ்,
மறைந்ததேதி : ஆகஸ்ட் 18, 1945


நேதாஜி என்று இந்திய மக்களால்
மரியாதையுடன் அழைக்கப்படும் சுபாஷ்
சந்திர போஸ்.நூற்றுக்கணக்கான இந்தியர்களை
ஒன்றுதிரட்டி இந்திய தேசிய ராணுவத்தை
உருவாக்கி அப்போது இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயர்க்கு


எதிராக தாக்குதல் நடத்தியவர். இவர் மரணம் இன்றளவும்
ஆங்கிலேயர்க்கு புரியாதபுதிராகவே உள்ளது.இந்தியமக்கள்
அனைவரும் உங்களுக்காக தலை நிமிர்ந்து வணங்குகிறோம்.
உங்களால் நம் தேசத்திற்கு பெருமை.




வினாக்கள் மற்றும் பதில்கள்
1.பசுமைப்புரட்சிக்கு காரணமாக பயிர் எது ?
2.சணல் உற்பத்தி அதிகமாக உள்ள மாநிலம் எது ?
3.நமது உடலின் வியர்க்காத பகுதி எது ?
4.ஒட்டகத்துக்கு வேர்க்காதது ஏன் ?
5.ஸ்பெயின் நாட்டின் தேசிய சின்னம் எது ?
6.’ஆசியாவின் வைரம்’ என்று அழைக்கப்படும் நாடு எது ?
7.ஒரு மண்டலம் என்பது எத்தனை நாட்கள் ?
8.வேர் இல்லாத தாவரம் எது ?
9.இந்தியர்களே ஆரம்பித்த முதல் வங்கி எது ?
10.இந்தியாவில் எந்த நகரில் அரண்மனைகள் அதிகம் உள்ளன?

பதில்கள்:
1.கோதுமை,2.மேற்கு வங்காளம், 3.உதடுகள்,
4.அதற்கு வியர்வை நாளங்கள் கிடையாது, 5.கழுகு,
6.இலங்கை,7.48 நாட்கள், 8.இலுப்பை, 9.பஞ்சாப் நேஷனல்
பேங்க்,10.கொல்கத்தா
இன்று ஆகஸ்ட் 17



பெயர் : ஷங்கர்,
பிறந்த தேதி : ஆகஸ்ட் 17, 1963

இந்தியத் திரைப்பட இயக்குநர்,இவருடைய
படங்கள் தொழில் நுட்பம் , பிரம்மாண்டம் ,
அதிரடியான சமூகக் கருத்துகளை மையமாகக்
கொண்டு உருவாக்கப்படுகிறது.வரும் காலத்தில்
இந்தியாவின் பெருமையை உலகநாடுகளுக்கு
எடுத்துச் செல்வதில் இவரின் பங்கு முக்கியமானதாக
இருக்கும்.




வினாக்கள் மற்றும் பதில்கள்
1.ஹாலந்து நாட்டின் முந்தைய பெயர் என்ன ?


2.மிகச்சிறிய தேசியக்கீதம் பாடப்படும் நாடு எது ?
3.உலகின் மிகப்பெரிய சமுத்திரம் எது ?
4.மூன்று தலைநகரங்களை கொண்டுள்ள நாடு எது ?
5.பிளாஸ்டிக்-ல் பாலம் கட்டியுள்ள நாடு எது ?
6.இந்தியாவின் முதல் பெண் மேயர் யார் ?


7.நீரில் அதிகமாக கரையும் வாயு எது ?
8.நீருக்குள் பறக்கும் பறவை எது ?
9.கைபர் கணவாயின் நீளம் என்ன ?
10.கிரகங்களில் வேகமாகச் சுழலக்கூடியது எது ?

பதில்கள்:


1.நெதர்லாந்து,2.ஜப்பான், 3.பசிபிக் பெருங்கடல்,
4.தென்ஆப்பிரிக்கா, 5.ஸ்காட்லாந்து,6.தாரா செரியன்,
7.அமோனியா, 8.பெங்குயின், 9.33 மைல்கள்,10.வியாழன்
இன்று ஆகஸ்ட் 14





பெயர் : வேதாத்திரி மகரிஷி ,
பிறந்த தேதி : ஆகஸ்ட் 14, 1911

ஆன்மிகத்தை அடிப்படையாகக் கொண்டு


சமுதாயப் பணி ஆற்றி வந்த உயர்ந்த தத்துவ
ஞானி. “ வாழ்க வளமுடன் ” என்ற உயர்ந்த
வார்த்தையை தன் சீடர்களுக்கு வழங்கியவர்.
உங்களைப்போல் ஞானிகள் இந்த பாரதத்தில் பிறப்பது
எங்களுக்குத் தான் பெருமை.


வினாக்கள் மற்றும் பதில்கள்
1.பறக்க இயலாத பறவை ?
2.அமெரிக்காவின் முதல் ஜனாதிபதி யார் ?


3.ஸ்பெயின் நாட்டின் தேசியப் பெயர் என்ன ?
4.செவ்வாய் கிரகத்துக்கு எத்தனை துனை கோள்கள் உள்ளன?
5.இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு ஸ்டேடியம் ?
6.கடலில் கலக்காத நதி எது ?
7.விஜய நகரத்தை தாக்கி அழித்தவர்கள் யார் ?


8.கூடுகட்டாத பறவை எது ?
9.பிரமிடுகள் உள்ள நாடு எது ?
10.காமன்வெல்த் கூட்டமைப்பில் எத்தனை நாடுகள் உள்ளன?

பதில்கள்:
1.நெருப்புக் கோழி,2.ஜார்ஜ் வாஷிங்டன் 3.எஸ்பானா,


4.இரண்டு, 5.கொல்கத்தா யுவபாரதி ஸ்டேடியம்,6.யமுனா,
7.பாமினி அரசர்கள் 8.குயில், 9.எகிப்து,10.54 நாடுகள்

இன்று ஆகஸ்ட் 13





பெயர் : எடுவர்டு பூக்னர்,
மறைந்த தேதி : ஆகஸ்ட் 13, 1917

ஜெர்மனியைச் சேர்ந்த வேதியியல் அறிஞரும்


நொதியியல் (zymologist) அறிஞரும் ஆவார்.
இவர் நுண்ணுயிரி செல்கள் இல்லாமலே
நொதிக்கச்செய்யும் முறையக் கண்டதற்காக,
1907 ஆம் ஆண்டிற்கான வேதியியலுக்கான நோபல் பரிசைப்
பெற்றார்




வினாக்கள் மற்றும் பதில்கள்
1.15 நிமிடங்களே அரசராக இருந்தவர் யார் ?
2.அமெரிக்காவில் அடிமை முறையை ஒழித்தவர் யார் ?
3.பிரான்ஸ் நாட்டில் செவாலியர் விருது பெற்ற முதல்
இந்தியர் யார்?
4.சுதந்திர இந்தியாவின் கடைசி வைஸ்ராய் யார் ?
5.இந்தியாவின் மிக நீளமான இரயில் பாலம் எது ?
6.சீன நாட்டின் தேசிய விளையாட்டு எது ?
7.செஞ்சிலுவைச் சங்கத்தை நிறுவியவர் யார் ?
8.காஷ்மீர் சமஸ்தானம் இந்தியாவுடன் எப்போது இணைந்தது ?
9.உலகின் பெரும்பாலான மக்களளால் பேசப்படும் மொழி என்ன?
10.பாகிஸ்தானின் முதல் கவர்னர் ஜெனரல் யார் ?

பதில்கள்:
1.14 ம் லூயி,2.ஆபிரகாம் லிங்கன் 3.சிவாஜி கணேசன்,
4.மெளண்ட்பேட்டன் பிரபு, 5.சோன் பாலம்,6.பிங்பாங்,
7.ஹன்றி டுனண்ட் 8.1947-ல், 9.மாண்டரின் - சீன மொழி,
10.முகம்மது அலி ஜின்னா
இன்று ஆகஸ்ட் 12



பெயர் : வில்லியம் ஷாக்லி ,
மறைந்த தேதி : ஆகஸ்ட் 12, 1989

டிரான்சிஸ்டரைக் கண்டுபிடித்த மூவருள் ஒருவர்.
பிரிட்டனில் பிறந்த அமெரிக்க இயற்பியலாளர்.
இவருக்கும் இவருடன் சேர்ந்து டிரான்சிஸ்டரைக்
கண்டுபிடித்த ஜோன் பார்டீன், வால்ட்டர் பிரட்டன்
ஆகியோருக்கு 1956 ஆம் ஆண்டு நோபல் பரிசு
வழங்கப்பட்டது.



வினாக்கள் மற்றும் பதில்கள்


1.உலகின் மிக நீளமான நதி எது ?
2.உலகின் முதல் டெலிபோன் எக்ஸ்சேஞ் எந்த ஆண்டு
அமைக்கப்பட்டது ?
3.ரூமேனியா நாட்டின் தேசியப்பூ எது ?
4.பின்லாந்து நாட்டின் தேசியப் பெயர் என்ன ?


5.பனிக்கட்டிகளால் சூழப்பட்ட கண்டம் எது ?
6.இந்தியாவில் உயரமான கோபுரம் எது ?
7.இந்தியாவில் உயரமான கோடை வாசஸ்தலம் எது ?
8.இந்தியாவில் உயரமான நீர்விழ்ச்சி எது ?
9.அர்ஜூனா விருது பெற்ற முதல் செஸ் விளையாட்டு வீரர் யார்?


10.விண்வெளியில் பறந்த முதல் பிராணியின் பெயர் என்ன ?

பதில்கள்:
1.நைல் நதி,2.1870,3.பூவரசம் பூ,4.ஸுமென் தஸாவல்ட்டா,


5.அண்டார்டிக்கா,6.குதுப்மினார் -240அடி,7.குல்மார்க்(காஷ்மீர்)
8.ஜெர்ஸொப்பா - மைசூர், 9.மானுவல் ஓரோன்,
10.லைகா என்னும் நாய்.
இன்று ஆகஸ்ட் 11





பெயர் : ஜாக்சன் பாலக் ,
மறைந்த தேதி : ஆகஸ்ட் 11, 1894

ஒரு செல்வாக்குள்ள அமெரிக்க ஓவியர்


ஆவார். இவர் பண்பியல் வெளிப்பாட்டியக்
கலை இயக்கத்தில் முக்கியமான ஒருவராக
இருந்தார்.பல வண்ணங்களை பயன்படுத்தி
கோழி கிண்டுவது போல் கிறுக்கி ஒரு தத்ரூபமான
ஒவியத்தை உருவாக்குபவர்.



வினாக்கள் மற்றும் பதில்கள்
1.எகிப்து நாட்டின் தேசியப்பூ எது ?
2.கடல் நீரில் உள்ள உப்பின் சதவீத அளவு என்ன ?


3.உதயகிரி கோட்டை எங்குள்ளது ?
4.பிஜி நாட்டின் தலைநகர் எது ?
5.டெல்லியை நிர்மாணித்தவர் யார் ?
6.இந்தியாவில் ரேடியோ ஒலிபரப்பு எந்த ஆண்டு
தொடங்கப்பட்டது ?
7.அதிகப் பாசன வசதி பெறும் மாநிலம் எது ?
8.தென்மேற்கு இரயில்வேயின் தலைமையகம் எங்குள்ளது ?


9.மலர்களுக்கான மிகப்பெரிய ஏலச்சந்தை எங்குள்ளது ?
10.ஆசியாவின் மிகப்பெரிய ரோஜாத் தோட்டம் எங்குள்ளது ?

பதில்கள்:
1.தாமரை, 2. 35%,3.கன்னியாகுமரி, 4.சுவா,


5.எட்வின் லட்யன்ஸ்,6.1927-ல்,7.பஞ்சாப்,
8.பெங்களுர்,9.ஆல்ஸ்மியர்,10.சண்டிகர்.

இன்று ஆகஸ்ட் 9





பெயர் : ஹேர்மன் ஹெசே,
மறைந்ததேதி : ஆகஸ்ட் 9, 1962

இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற


கவிஞர், நாவலாசிரியர், ஓவியர்.1946 இல்
நோபல் பரிசு பெற்றார். கவிதைகள், நாவல்கள்,
கட்டுரைகள் எழுதிய இவரது Steppenwolf,
Siddhartha, The Glass Bead Game ஆகிய படைப்புக்கள்
முக்கியமானவை. சித்தார்த்த தமிழிலும்
மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.



வினாக்கள் மற்றும் பதில்கள்
1.இந்தியாவின் மிக நீளமான ஆறு எது ?
2.மனிதன் உபயோகித்த முதல் உலோகம் எது ?


3.இந்தியாவில் மணியார்டர்சேவை எப்போது தொடங்கப்பட்டது?
4.ஐ.நா.பொதுச்செயலாளரின் பதிவி எத்தனை ஆண்டுகள்?
5.ஜெர்மனி நாட்டின் தேசியப்பூ ?
6.விமானத்தின் வேகத்தை அளக்கப்பயன்படுத்தப்படும் கருவி எது?
7.’கண்ட்லா துறைமுகம்’ எங்கு உள்ளது ?


8.இங்கிலாந்து நாட்டின் தேசியப்பூ எது ?
9.காமராசரின் அரசியல் குரு யார் ?
10.காந்திஜி எத்தனை நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்?

பதில்கள்:


1.பிரம்மபுத்திரா, 2.செம்பு,3.1880 ஆம் ஆண்டு
4.4 ஆண்டுகள், 5.சோளப்பூ,6.ரபி மீட்டர்,7.குஜராத்,
8.ரோஜா,9.சத்தியமூர்த்தி,10.2,338 நாட்கள்
.
இன்று ஆகஸ்ட் 7


 இரவீந்திரநாத் தாகூர்


பெயர் : இரவீந்திரநாத் தாகூர்,
பிறந்த தேதி : ஆகஸ்ட் 7, 1941

புகழ் பெற்ற வங்காள மொழிக் கவிஞர் ஆவார்.


இந்தியாவின் தேசியகீதமான ஜன கண மன
பாடலை இயற்றியவர். இவர் மக்களால் அன்பாக
குருதேவ் என்று அழைக்கப்பட்டார். இவருடைய
மற்றொரு பாடல் அமர் சோனார் பங்களா வங்காளதேசத்தின்
தேசிய கீதமாக உள்ளது. கீதாஞ்சலி என்ற கவிதை நூலுக்காக


இவர் 1913-ல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றார்.
நோபல் பரிசு பெற்ற முதல் ஆசியர் இவரே ஆவார்





வினாக்கள் மற்றும் பதில்கள்
1.சப்ர்மதி ஆஸ்ரமம் எங்குள்ளது ?
2.புத்தகயா எங்குள்ளது ?
3.இந்தியா கேட் எங்குள்ளது ?
4.அரிக்கமேடு எந்த மாநிலத்தில் உள்ளது ?
5.இந்தியாவின் ஹாலிவுட் எது ?
6.நாளந்தா பல்கலைக்கழகம் எந்த மாநிலத்தில் உருவானது ?
7.தேக்கடி வன விலங்குகள் சரணாலயம் எங்குள்ளது ?
8.சேர மன்னர்களைப் பற்றி கூறும் நூல் எது ?
9.மிகப்பழங்கால தமிழ் நாகரித்தை அறிய உதவும் நூல் எது ?
10.நற்றினையில் எத்தனை பாக்கள் உள்ளன ?

பதில்கள்:
1.குஜராத் மாநிலத்தில் உள்ளது, 2.பீகார் மாநிலம்,3.டெல்லியில்
4.பாண்டிச்சேரி, 5.மும்பை,6.பீகார்,7.கேரள மாநிலத்தில்,
8.பதிற்றுப்பத்து,9.தொல்காப்பியம்,10.400 பாக்கள்.
இன்று ஆகஸ்ட் 5



பெயர் : நீல் ஆம்ஸ்ட்ராங்
பிறந்த தேதி : ஆகஸ்ட் 5, 1930

சந்திரனில் தரையிறங்கிய முதல் மனிதராவார்.
ஜூலை 20, 1969இல் அமெரிக்காவின்
அப்போலோ - 11 விண்கலத்தில் எட்வின்
ஆல்ட்ரின்,மைக்கேல் கொலின்ஸ் ஆகியோருடன்
பயணித்த ஆம்ஸ்ட்ராங் முதலில் சந்திரனில் காலடி வைத்த
மனிதரானார். இவரைத் தொடர்ந்து ஆல்ட்ரினும்
சந்திரனில் தரையிறங்கினார்.




வினாக்கள் மற்றும் பதில்கள்
1.நெடுந்தொகை எனக் கூறப்படும் நூல் எது ?


2.குறிஞ்சிப்பாட்டு யாரால் எழுதப்பட்டது ?
3.சென்னையில் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் எப்போது
தொடங்கப்பட்டது ?
4.இந்தியாவில் பொது இடங்களில் புகைப்பிடிப்பதற்கு
தடைவிதிக்கப்பட்ட முதல் மாநிலம் எது ?
5.புறா பந்தயத்தின் தாயகம் எது ?


6.’பத்மஸ்ரீ’ பட்டம் வாங்க மறுத்த பத்திரிகை ஆசிரியர் யார் ?
7.டாக்டர் பி.ஆர். அம்பேத்கார் பிறந்த ஊர் எது ?
8.2001 - 2002 ஆம் ஆண்டை மத்திய அரசு என்ன ஆண்டாக
அறிவித்தது ?
9.சென்னையில் சிறிய சட்டமன்றத் தொகுதி எது ?


10.நமது உடலில் கனமான உறுப்பு எது ?

பதில்கள்:
1.அகநானுறு, 2.கபிலர்,3.பிப்ரவரி 17,2001
4.கேரளா, 5.பெல்ஜியம்,6.ஏ.என். சிவராமன்,7.மோவு,


8.அகிம்சை ஆண்டு,9.சேப்பாக்கம்,10.மூளை.
இன்று ஆகஸ்ட் 6 





பெயர் : அலெக்சாண்டர் பிளெமிங்
பிறந்த தேதி : ஆகஸ்ட் 6, 1881

நுண்ணுயிர் கொல்லியான சிதைநொதியைக்


கண்டுபிடித்தவர். மேலும், நுண்ணுயிர்
கொல்லியான பெனிசிலினை பெனிசிலியம்
நொடேடம் என்ற பூஞ்சையிலிருந்து
பிரித்தெடுத்தவர்.