Thursday, August 26, 2010

ஆகஸ்ட் 2

வினாக்கள் மற்றும் பதில்கள்
1.கலிங்கத்துப்பரணியை இயற்றியவர் யார் ?


2.’ மண நூல்’ என்பது எந்த நூலின் வேறுபெயர் ?
3.சென்னைப்ப் பல்கலைக்கழகம் எப்போது உருவாக்கப்பட்டது ?
4.இந்தியாவின் பிஸ்மார்க் என்று அழைக்கப்பட்டவர் யார் ?
5.பால் உற்பத்தியைப் பெருக்க அரசு கொண்டு வந்த திட்டத்தின்


பெயர் என்ன ?
6.’சுதந்திரா கட்சி’யை உருவாக்கியவர் யார் ?
7.’திருத்தொண்டர் புராணம்’ என்பது எந்த நூலின்
வேறொரு பெயர்?
8.கல்பாக்கம் அனுமின் நிலையம் எந்த மாவட்டத்தில் உள்ளது?
9.சென்னை மாநகராட்சி எப்போது உருவாக்கப்பட்டது ?


10.பவானிசாகர் அணை எந்த மாவட்டத்தில் உள்ளது ?


பதில்கள்:

1.செயங்கொண்டார், 2.சீவகசிந்தாமணி,3.1857 ஆம் ஆண்டு,


4.சர்தார் வல்லபாய் படேல், 5.வெண்மைப் புரட்சி, 6.ராஜாஜி,
7.பெரியபுராணம், 8.காஞ்சிபுரம்,9.1688 ஆம் ஆண்டு,10.ஈரோடு

இன்று ஆகஸ்ட் 2






பெயர் : அலெக்சாண்டர் கிரகாம் பெல் ,
மறைந்த தேதி : ஆகஸ்ட் 2, 1922

இவர் ஆசிரியராகவும், அறிவியல் அறிஞராகவும்


அறியப்படுகிறார். இவரது தாயாரும்
மனைவியும் செவிடராதலினால் இவரது
ஆய்விற்கு இது ஓர் உந்துசக்தியாக
அமைந்திருக்கலாம். இவரது ஆய்வுகள் ஊடாக 1876 ஆம்
ஆண்டு தொலைபேசி உருவாக்கப்பட்டது. இவர் பெல்
தொலைபேசி நிறுவனத்தின் நிறுவனரும் ஆவார்.

No comments:

Post a Comment